< Back
சினிமா செய்திகள்
அப்டேட்டுகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் படக்குழு... ரசிகர்கள் உற்சாகம்
சினிமா செய்திகள்

அப்டேட்டுகளை குவிக்கும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு... ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
13 April 2023 8:28 PM GMT

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் 'பிஎஸ் ஆந்தம்' வருகிற 15-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் 'பிஎஸ் ஆந்தம்' வருகிற 15-ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்