< Back
சினிமா செய்திகள்
நடிகர் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...!
சினிமா செய்திகள்

நடிகர் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...!

தினத்தந்தி
|
10 Jun 2022 4:30 AM GMT

கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் மோகன்லாலின் வீட்டிலிருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன


கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள பட உலகில் முன்னணி நடிகர் மோகன்லாலின் கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கொச்சி வீட்டிலிருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்து, மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

மேலும் செய்திகள்