< Back
சினிமா செய்திகள்
மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்த் பங்களா ரூ.400 கோடிக்கு விற்பனை?
சினிமா செய்திகள்

மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்த் பங்களா ரூ.400 கோடிக்கு விற்பனை?

தினத்தந்தி
|
22 Sep 2023 1:56 AM GMT

இந்தி திரையுலகில் 1950 மற்றும் 60-களில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் தேவ் ஆனந்த். இவர் நடித்த 'பாஸி', 'ஜால்', 'பேயிங் கெஸ்ட்', 'டாக்சி டிரைவர்' உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2011-ல் தனது 88-வது வயதில் தேவ் ஆனந்த் மரணம் அடைந்தார். அவர் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தபோது வசித்த சொகுசு பங்களா மும்பை ஜூஹு பகுதியில் உள்ளது.

40 ஆண்டுகள் இந்த பங்களாவில்தான் வாழ்ந்தார். தேவ் ஆனந்த் மறைவுக்கு பிறகு அந்த பங்களா கவனிப்பாரற்று கிடந்தது. தேவ் ஆனந்த் மகன் சுனில் அமெரிக்காவிலும், மகள் தேவினா, மனைவி கல்பனா கார்த்திக் ஆகியோர் ஊட்டியிலும் வசிக்கிறார்கள்.

தற்போது பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.400 கோடிக்கு அந்த பங்களாவை விற்க குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பங்களாவை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்