< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்திலிருந்து எடிட்டர் விலகல்?
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்திலிருந்து எடிட்டர் விலகல்?

தினத்தந்தி
|
17 May 2024 12:57 PM GMT

ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களின் பணிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், புஷ்பா 2 படத்திலிருந்து விலகுவதாக படத்தொகுப்பாளர் ஆண்டனி ரூபன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது. தற்போது, 'புஷ்பா 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'புஷ்பா 2' ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான வணிகம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநில வெளியீட்டு உரிமமும் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாம் . இதுவே, அல்லு அர்ஜுன் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்கிற எதிர்பார்ப்பில் 'புஷ்பா 2' படக்குழுவினர் புரோமோஷன்களை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், படத்தொகுப்பாளர் ஆண்டனி ரூபன் இத்திரைப்படத்திலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி எடிட்டராக வலம் வருபவர் ஆண்டனி. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களின் பணிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், புஷ்பா 2 படத்திலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் தமிழில், தெறி, வேதாளம், ரெமோ, அண்ணாத்த, ஜவான் ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்