< Back
சினிமா செய்திகள்
Anjali will play the role of vilaimathu again
சினிமா செய்திகள்

மீண்டும் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி

தினத்தந்தி
|
8 July 2024 2:35 AM GMT

சமீபத்தில் அஞ்சலி 'கேங்க்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', 'நாடோடிகள்-2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் 'கேங்க்ஸ் ஆப் கோதாவரி'. இதில் அஞ்சலி, விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலைமாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார். இந்த தொடர் வரும் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, ''இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமுகத்தில் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷபா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்