< Back
சினிமா செய்திகள்
இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பிய நடிகை..!
சினிமா செய்திகள்

இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பிய நடிகை..!

தினத்தந்தி
|
8 Oct 2023 11:25 AM GMT

இஸ்ரேலில் இருந்து பாலிவுட் நடிகை ஒருவர் உயிர் தப்பி பாதுகாப்பாக இந்தியா திரும்பினார்.

புதுடெல்லி,

39-வது 'ஹய்பா' சர்வதேச திரைப்பட விழா இஸ்ரேலில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் சென்று இருந்தார்.

இந்நிலையில் நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த மோதல் காரணமாக திரைப்பட விழாவுக்கு சென்ற நடிகை நுஷ்ரத் பரூச்சா அங்கு சிக்கி இருந்தார். அவர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. அவரை தொடர்பு கொள்ள பாலிவுட் திரை உலகம் பல முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் நுஷ்ரத்தை தொடர்பு கொள்ள முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தனைக்கும் நுஷ்ரத் நடித்த 'அகெல்லி' திரைப்படம் ஈராக் பாலைவனத்தில் ஒருவித அசாதாரண சூழலில் சிக்கும் நபர் பாதுகாப்பாக வெளியேறுவதை மையமாக கொண்டது. இந்நிலையில் நுஷ்ரத், பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களிடம் எந்த கருத்தையும் நுஷ்ரத் தெரிவிக்காமல் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி எம்.பி. வான்வெய்ராய் கார்லுக்கி, இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்