வடுவூர் பகுதியில் பரவலாக மழை

வடுவூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-06-27 18:45 GMT

வடுவூர்:

வடுவூர் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது.இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்