சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-09-27 19:25 GMT

பெங்களூரு,

நில மோசடி விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவுப்படி மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட 4 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, கா்நாடக ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் முதல்-மந்திரி சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.

அல்லது ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்