ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

ராசிபுரத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2,095 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 72 மூட்டைகளும், கொட்டு பருத்தி 85 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன.

ரூ.50 லட்சத்திற்கு விற்பனை

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 669-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 779-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 100-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 390-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 300 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 370-க்கும் ஏலம் விடப்பட்டது.

நேற்று நடந்த இந்த ஏலத்தில் 2,252 பருத்தி மூட்டைகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


Next Story