நின்றுகொண்டிருந்த ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து - ரெயில்வே ஊழியர் பலி


நின்றுகொண்டிருந்த ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து - ரெயில்வே ஊழியர் பலி
x

நின்றுகொண்டிருந்த ரெயில் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் ரெயில்வே ஊழியர் உயிரிழந்தார்..

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாதொல் மாவட்டம் சிங்க்பூர் ரெயில்நிலையம் அருகே இன்று நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதியது.

இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. மேலும், இந்த விபத்தில் ரெயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story