நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார் ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேச்சு


நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார் ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 15 May 2017 5:30 AM (Updated: 15 May 2017 5:37 AM)
t-max-icont-min-icon

நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார். தவறான பழக்கங்களை கைவிட வேண்டும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமணமண்டபத்தில் ரசிகர்களை இன்று முதல் ரஜினி சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவரை சந்திக்கும் ரசிகர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. அடையாள அட்டை இல்லாத ரசிகர்கள் யாரும் மண்டபத்துக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப் பட்ட கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்ட ரசிகர்களை ரஜினி இன்று சந்தித்தார். முதல்நாளில் மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 750 பேர்  ரஜினியை சந்தித்து தனித் தனியாக படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

அதிகாலையிலேயே மண்டபத்துக்கு அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் அனைவரும் மண்டபத்தின் உள்ளே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.சரியாக 9 மணிக்கு ரஜினி மேடைக்கு வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருடன் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் வந்திருந்தார். முதலில் எஸ்.பி. முத்து ராமன் பேசினார். அப்போது ரசிகர்கள் அமைதி யாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதை தொடர்ந்து ரஜினி பேசினார். பின்னர் வரிசை எண்படி ரசிகர்கள் மேடைக்கு அழைக் கப்பட்டு ரஜினியுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இன்று ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன.

நாளை மேலும் 3 மாவட்ட ரசிகர்கள் சென்னை வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். வருகிற 19-ந்தேதி வரை தினந்தோறும் ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்திப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

ரசிகர்களிடையே  ரஜினிகாந்த் பேசியதாவது;-

வாழவைக்கும் ரசிகர்களுக்கு எனது நன்றி; உண்மை பேசுவது, நல்ல பழக்கங்கள்,ஒழுக்கத்தை நான் முத்துராமானிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்.எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன்.அடுத்தபடத்தை வரும் 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறோம்.ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், நல்ல படத்தை கொடுப்பேன்

அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; பணம் சம்பாதிக்க தமது ரசிகர்களை விட மாட்டேன்.1996-ல் நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள். நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார். தவறான பழக்கங்களை கைவிட வேண்டும்.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.



Next Story